நீயும்…நானும்
ஒரே வீதியில்தான் வசித்தோம்,
ஒரே பாடசாலையில் படித்தோம்,
உன் பார்வைக்குள் நானும்…
என் பார்வைக்குள் நீயுமென களித்தோம்.
இனவெறி தாக்குதல்…நம்மை
இருவேறு திசைகளில் விசிறியடிக்க…
… … …
இன்று…
என்,
மனமெல்லாம் நீயிருக்க…!
என் தோழி…
மாலதி நீ எங்கிருக்க?
(இன்றைய ஈழத்தில்
இடபெயர்வின் அதிர்வு)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article