மாலதி.....

மாலதி.....

நீயும்…நானும்
ஒரே வீதியில்தான் வசித்தோம்,
ஒரே பாடசாலையில் படித்தோம்,
உன் பார்வைக்குள் நானும்…
என் பார்வைக்குள் நீயுமென களித்தோம்.

இனவெறி தாக்குதல்…நம்மை
இருவேறு திசைகளில் விசிறியடிக்க…
…   …   …

இன்று…
என்,
மனமெல்லாம் நீயிருக்க…!
என் தோழி…
மாலதி நீ எங்கிருக்க?

           (இன்றைய ஈழத்தில்
             இடபெயர்வின் அதிர்வு)