வணங்காமண்

வணங்காமண்

பசியால் துடிப்போர்க்கும்
பாதி உடலாய் கிடப்போர்க்கும்
உணவு மருந்தேந்தி வந்த
உறவு கப்பலை…
படைக்கொண்டு வளைத்து
தடை செய்து சிறைவைத்து
ஏதேதோ சொல்லி
இலங்கை நடிக்குது!
இருக்கும் தமிழினத்தையும்
கொல்லத் துடிக்குது!!
இதை காணும் தமிழ்மனம்
இதயம் வெடிக்குது!!!

வணங்கா மண்னை,
அழும் இனம்
எதிர்பார்த்து நிற்கிறது!
ஆயுத இனம்
எதிர்த்து நிற்கிறது!!

      (வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை

புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி புறப்பட்ட வணங்கா மண் கப்பல் நேற்று (04-06-2009) அதிகாலை இலங்கைக்கருகில் சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது)