இன விடுதலைக்கெதிராய்
போராயுதங்கள் தந்த
புண்ணியவான்களே!
போர்முடிந்தது -அங்கே
பொழுது விடிந்ததா?
மண்ணையுண்டு காற்றைவிழுங்கி
மனிதன் வாழ வழியுண்டா?
எங்கள் துயரை எடுத்துரைக்க
எங்கேனும் மொழியுண்டா?
முள்வேலி நரகத்தில்
மூச்சு திணருது,
மூன்று லட்ச உயிர்களென
எந்த நாடு உணருது!!
ஓ…நாட்டாமை நாடுகளே!
இருக்கும் உயிரை…
காப்பாற்ற தொண்டுச்செய்!
இல்லயேல்…
எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!
6 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஓகஸ்ட் 20, 2009 இல் 11:54 முப
ஹேமா
//எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!//
இதைச் செய்கிறார்கள் இல்லை யாரும்.
அவர்கள் எலிகளை வைத்திருக்கிறோம் என்றுதானே எங்கள் எட்டப்பரோடு சேர்ந்து சொல்கிறார்கள்.எலிகளை அழிக்கக் குண்டுகள் தேவையில்லை.அவர்களோடு சேர்ந்துகொண்டது இயற்கையும்தானே !
ஓகஸ்ட் 20, 2009 இல் 1:59 பிப
சித்தன்
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஹேமா.
ஓகஸ்ட் 20, 2009 இல் 1:52 பிப
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.
மனதை கொல்கிறாய் சித்தா.உயிரை பிசைகிறாய்.கவலை படாதே,நம் துயரின் மொழி புரியவில்லையென்றால் எதிரிகளின் புலன்கள் வெடிக்கும் புது மொழியில்
மொழி பெயர்ப்போம் “நம் துயரின் வலியை”.
“ஜெரி ஈசானந்தா”-மதுரை
ஓகஸ்ட் 20, 2009 இல் 2:14 பிப
சித்தன்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க “ஜெரி ஈசானந்தா”. உங்களின் தளத்திலும் ஈழத்தின் வலியை பதிவு செய்திருக்கின்றீர்கள் .இந்த தளத்தில் 99 படைப்புகள் … அத்தனையும் ஈழத்தின் வலியை பதிவு செய்துள்ளேன் தொடர்ந்து வாங்க.
ஜனவரி 31, 2011 இல் 10:42 முப
indhirajith yathav
yengaluku seitha throgathirku india oru nal thandanai anupavikum yengal kanavu niraiverum, ezam vellum athai kalam sollum
ஏப்ரல் 6, 2012 இல் 9:30 முப
சித்தன்
உணர்வுக்கு நன்றிங்க.