இந்திய ஆயுதத்தில்
தமிழனின் வரி.
இலங்கையின் இராணுவத்தில்
இந்திய ஆயுதம்.
தமிழனை கொல்லுது
இலங்கை இராணுவம்.
இந்த சுழற்சியில்
ஓர் சூழ்ச்சி.
தமிழினத்தை,
அழிப்பதே குறி!_அதற்கு
துணைப் போகிறது
தமிழனின் வரி!!
(சோனியா, தமிழகத்திற்கு வந்து, போர் நிறுத்தம் வந்துவிட்டது என்ற பொய் கூறவதற்கு சற்று முன் இலங்கையின், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112 க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article