அன்று,
கைகளுக்கு விலங்கிட்டு
கண்களைப் பிடுங்கி_அதை
கால்களால் மிதித்தது…
காடையர்க் கூட்டம்.
இன்று,
கைகால்களை கட்டி
ஆடைகளை உருவி,
“அவை” போடுகின்றன…
துச்சாதன ஆட்டம்.
இது,
உடலியல்
உளவியல் சித்ரவதை!
உறவுகளே!
உலகுக்கு பரப்புங்கள்…
சித்தன் சொல்லுமிதை!!
(15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article