ஈழ அவலம்

ஈழ அவலம்

குட்டிகளை சுமந்தோடும்
கங்காருகளாய்………

சேய் உயிர் ஏந்திக்கொண்டு
தாய் ஓடும் அவலம் பாரீர்!
ஓடிவந்த மக்கள் மீதும்
தேடித்தாக்கும் படையை காணீர்!!

இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து
எங்குவந்தோம் தெரியவில்லை!,
எம்மினத்தின் தலைகள் கண்டால்
வான்படையின் குண்டுத்தொல்லை!!

பசியால் குழந்தை துடிக்கிறது
பக்கத்திலே குண்டு வெடிக்கிறது.
இது,
பசிக்கின்ற குழந்தைகு,
பாலூட்டும் அவகாசம்
கிடைக்காத ஒரு தேசம்!!!.

    சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009   சிறிலங்கா வான்படையினரால் சுமார் 20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகள் வீசப்பட்டன.)