பறக்கும் வான்படை
கொல்லத் துடிக்குது,
பாடசாலையிலும்
குண்டு வெடிக்குது.
பதுங்குக் குழிக்குள்
பள்ளிப் பிள்ளைகள்,
பயந்து ஒளியும்
சின்ன முல்லைகள்.
மனசாட்சி உள்ளோரை
இக்காட்சி வருத்தும்,
கொலைவெறி மகிந்தாவை…
நீதிக்கூண்டில் நிறுத்தும்!
(பாடசாலையிலும் படை மிரட்டலுக்கு உள்ளாகி, துயருரும் நம் குலக் கொழுந்துகள்) (ஈழம் பற்றிய என் ஐம்பதாவது படைப்பு இது.)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article